3. படத்தின் கதை இடைவேளைக்கு பிறகு போக்கின்றி போகிறது. முடிவு பொருத்தமற்ற ஒரு முடிவு. ஆங்கிலப்படங்களின் பாதிப்பு தெரிகிறது. ஆனால் இந்தக்கதைக்கு பொருந்தவில்லை.
இவ்வளவு செலவழித்து திரைப்படம் எடுக்கமுன்பு கதையின் பொருத்தப்பாடு மற்றும் உறுதிப்பாட்டை யோசிக்க வேண்டாமா?
அல்லது சத்தமின்றி உறங்கிக்கொண்டு இருக்கும் கல்கி, சாண்டில்யன், அகிலன் போன்றோரின் கதைகளை அல்லது உண்மை வரலாறுகளை படமாக்கலாமே. ஆங்கிலப்படங்கள் அப்படித்தானே வருகின்றன.
ஏன் கற்பனையாக புதுக்கதை உருவாக்க வேண்டும். இருந்த வரலாறுகளை மக்கள் முதலில் தெரிந்து கொள்ளட்டுமே.
4. சோழர் பேசுகின்ற தமிழ் 12ம் நூற்றாண்டு இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள தமிழ் அதையே அந்தக்கால பேச்சு மொழியெனக்கருதிக்கொண்டு செல்வராகவன் பயன்படுத்தியுள்ளார்.
ஆனால் உண்மை என்னவென்றால் எந்தக்காலத்திலும் மொழிக்கு பேச்சு வடிவம் மற்றும் எழுத்து வடிவம் வேறுவேறாகத்தான் இருந்துள்ளது.
மற்றபடி படத்தில் சோழர் மற்றும் பாண்டியர்கள் கீழ்த்தரமாக சித்தரிக்கப்படுகின்றனர்.
சோழர்கள் காட்டுமிராண்டிகளாகவும் நரமாமிசம் தின்பவர்களாகவும் காட்டப்படுகின்றனர்.
அதிலும் அரசன் நடந்து செல்ல காலடிக்கு இரத்தம் வேண்டி பலர் பலியிடப்படுவது கொடுமையிலும் கொடுமை.
தமிழர்களுக்கிடையில் நடந்த எந்த யுத்தத்திலும் பெண்கள் கற்பழிக்கப்பட்ட வரலாறுகள் இல்லை. ஆனால் திரைப்படத்தில் நவீன பாண்டியர்களின் கையாள்களாக வரும் எத்தனையோ தமிழர்களே அத்தனை சோழப்பெண்களையும் கதறக்கதற கற்பழிப்பதாக காட்டுவது மற்றொரு கொடுமை.
மேலும் சோழர் கறுப்பு என்பதற்காக நீக்ரோ கறுப்பிலா காட்டுவது மக்களை.
5. படத்தில் வன்முறை மிக மிக அதிகம், யதார்த்தம் என்று கூறிக்கொண்டு வன்முறையை கண்ணுக்கு முன்னால் காட்டுவது மட்டும் யதார்த்தம் என்று ஆகிவிடாது. அடுத்தது இரட்டை அர்த்த வசனங்களும் வெளிப்படையான ஆபாச வசனங்களும்(ஆங்கிலம் மற்றும் தமிழில்) குடும்த்துடன் பார்க்கக்கூடிய ஒரு வாய்ப்பை இல்லாமல் செய்திருக்கிறது.
6. படத்தின் முக்கிய பலம் பின்னணி இசை. அசத்தியிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்குமார், சில இடங்களில் மெய்சிலிர்க்க வைக்கிறது பின்னணி இசை, அடுத்து பாடல்கள், பாடல்களுக்கான காட்சியமைப்பு அற்புதம்.
7. ஒட்டுமொத்த படத்தின் காட்சித்தெரிவு, காட்சியமைப்பு மற்றும் ஒளிப்பதிவு அற்புதம். காடுகள், பாலைவனங்கள், காட்டுவாசிகள், சோழர்களின் கட்டிட இடிபாடுகள் அத்தனையும் சிறந்த தெரிவுகள்
8. நடிப்பில் ரீமா, பார்த்திபன், கார்த்தி ஆகியோர் கொடுத்த பணியை சிறப்பாக செய்துள்ளனர். ஆனால் யார் கதாநாயகன் யார் வில்லன் யார் குணச்சித்திர பாத்திரம் என்பது கடைசி வரை குழப்பமாகத்தான் காணப்பட்டது. என்னைப்பொறுத்தவரை பார்த்திபன் மற்றும் ரீமா கதாபாத்திரங்கள் அழுத்தமாகவும் மனதில் பதிந்தும் காணப்படுகின்றன.
9. படத்தில் நிறைய நிறைய லொஜிக் ஓட்டைகள். மிக மோசமான குழப்பங்கள் கூட காணப்படுகின்றன. படம் எடுக்கும்போது செல்வராகவன் யாரிடமும் கதையை கூறவில்லையாம். அப்படிச்செய்யுங்கள் இப்படிச்செய்யுங்கள் என்று விபரித்து வேண்டியதை பெற்றுக்கொண்டாராம். ஒளிப்பதிவாளருக்கு கூட கதை தெரிந்திருக்கவில்லை போல இருக்கிறது. சில இடங்களில் கதைக்கும் காட்சிக்கும் முரண்பாடுகள் காணப்படுகின்றன. உதாரணமாக மழையில்லாமல் வரட்சி நிலவுவதாக பார்த்திபன் கூறிக்கொண்டிருக்க பின்னால் அழகுக்காக அருவி கொட்டுகிறது.
10. யாவரும் நிச்சயம் இந்தப்படத்தைப்பார்க்க வேண்டும், ஏனெனில்
- சிறு சிறு குறைகள் இருந்தாலும் தரமான படங்கள் எடுக்கும் இது போன்ற முயற்சிகளை ஆதரிக்க வேண்டும்
- மற்றையது படம் உங்களுக்கு புதிய ஒரு அனுபவத்தை அளிக்கும் என உறுதியாக கூற முடியும். ஏனென்றால் தமிழில் இதுபோன்ற படம் இதுவரை வரவில்லை.
மதுரகன்