செவ்வாய், 12 ஜனவரி, 2010
நீண்ட நாட்களுக்குப்பின்னர்...
Posted on PM 9:44 by செல்வராஜா மதுரகன்
ஆரம்பிப்பதும் ஆரம்பித்த வேலையை அரைகுறையில் விடுவதும் புதிதல்ல எனக்கு இருந்தபோதும் இந்தமுறை எனக்குள் கொஞ்சம் நம்பிக்கை கணிசமான அளவு நாட்களுக்காவது தொடர்வது என....
நான் நினைக்கிறேன் 2006ம் ஆண்டு ஆரம்பித்தது என் இணையப்பதிவிடல் என்தனையோ வலைப்பதிவுகளை வெவ்வேறு நோக்களுக்காக ஆரம்பித்து விட்டு விட்டுச் சென்றிருக்கிறேன். கல்விப்பழுவும் காரணம் கணினியை வீட்டில் விட்டு வந்ததும் காரணம்.
ஆனாலும் எங்காவது என் வெளிப்பாடுகளை வெளிப்படுத்தாமல் இருந்ததில்லை பல்கலைக்கழக அறிவித்தல் பலகையில் தொடங்கி வானொலி நிகழ்ச்சிகள் ஈறாக facebook, tamilmantram.com என கிடைத்த வேளைகள் ஒன்றையும் தவறவிடவில்லை என்னை வெளிப்படுத்துவதில் எனக்குள்ள ஆர்வம் அப்படி. ஏதோ என்னாலும் சில வெளிப்பாடுகளை செய்யமுடிகிறது அவற்றை சிறப்பாக கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையில் இந்த வலைப்பதிவு. இதை ஒரு நூலொன்றை வெளியிடுவதற்கு முந்தைய தற்பரிசோதனை என்றும் கொள்ளமுடியும் (முக்கியமாக கவிதைகளைப் பொறுத்தவரையில்).
எப்படியும் எந்த ஒரு முயற்சியிலும் துணை புரியும் நண்பர்களின் துணை இங்கும் இருக்கும் என நம்புகிறேன். முடிந்தவரை வாரம் ஒரு முறையாவது இடுகையிட முயற்சிப்பேன்....
நன்றிகளுடன்,
மதுரகன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
No Response to "நீண்ட நாட்களுக்குப்பின்னர்..."
கருத்துரையிடுக