வியாழன், 11 மார்ச், 2010
ஆறாவது புலன் சாத்தியமாக்குகிறார் பிரணவ் மிஸ்ட்ரி
Posted on PM 10:51 by செல்வராஜா மதுரகன்
அங்குலம் அங்குலமாக வளர்ந்து கொண்டிருந்த விஞ்ஞானம் தற்போது மீட்டர் மீட்டராக வளர ஆரம்பித்துள்ளது. இந்த நிலையின் பிரதிபலிப்பாக இந்தியாவைச் சேர்ந்த PhD மாணவரான 29 வயதான பிரணவ் மிஸ்ட்ரி ஆறாவது புலன்(Sixth Sense) எனும் சாதனத்தை உருவாக்கி கணினி மற்றும் தகவல் தொழினுட்பத்துறைக்கு சவால் விடுத்துள்ளார். அது தொடர்பான வீடியோ இணை இங்கே இணைத்துள்ளேன்.
">
">
">
http://economictimes.indiatimes.com/videoshow_ted/5231080.cms - முழுமையாக இங்கேயும் பார்க்கலாம்
தொழினுட்பத்திற்கும் மனித சாதாரண வாழ்க்கை முறைக்கும் இடையான இடைவெளியை குறைக்கும் முகமான அவரது கண்டுபிடிப்புக்கள் வேறுபட்ட ஒரு வாழ்க்கைத்தளத்தை உருவாக்கும் என்பது நிச்சயமாகப் புரிகின்றது.
">
">
http://economictimes.indiatimes.com/videoshow_ted/5231080.cms - முழுமையாக இங்கேயும் பார்க்கலாம்
தொழினுட்பத்திற்கும் மனித சாதாரண வாழ்க்கை முறைக்கும் இடையான இடைவெளியை குறைக்கும் முகமான அவரது கண்டுபிடிப்புக்கள் வேறுபட்ட ஒரு வாழ்க்கைத்தளத்தை உருவாக்கும் என்பது நிச்சயமாகப் புரிகின்றது.
உடல் அங்கங்களின் அசைவுகளைப் புரிந்து செயற்படும் கருவி ஒன்றினை அவர் 2000 ஆண்டிலேயே உருவாக்கியதும் அதை அப்போதைய இந்திய ஜனாதிபதி Dr. அப்துல் கலாம் முன்னிலையில் காட்சிப்படுத்தி பாராட்டுப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
பின்னர் Pocket Projector, கண்ணாடி, கேமரா ஆகியவற்றினை இணைத்து ஆறாவது புலன் கருவியை உருவாக்கி உள்ளார். TabletPC, I-Pad ஆகியவை தற்போதுதான் பாவனைக்கு வந்துள்ள நிலையில் அதை விடப் பன்மடங்கு முன்னேற்றகரமான கருவி ஒன்றை உருவாக்கி உள்ளமை பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதன் உற்பத்திப் பெறுமதி ஏறத்தாள 350 அமெரிக்க டாலர்களாக இருக்குமென அவர் கூறியதோடு இதற்குரிய OpenSource மென்பொருளை இலவசமாக வழங்குவதாக அவர் கூறினார்.
இந்தக் கருவி என்ன செய்கிறது - திரை தேவை இல்லை பெரிய அளவிலான கருவியும் இல்லை கழுத்திலே மாலை போல அணிந்து கொண்டு காதில் செவிப்பன்னியை சொருகிக்கொள்ளுங்கள் நீங்கள் செல்லும் இடமெல்லாம் வருகிறது ஆறாம் புலன். கிடைக்கும் சுவர்களின் கிடைக்காவிட்டால் வெள்ளைத் தாளினை உங்கள் திரையாக பயன் படுத்தி உங்கள் கை விரல்களாலேயே சுட்டுங்கள். கை விரல்களால் தேவையான இடங்களை படம் பிடிக்கலாம். இப்படி எத்தனையோ (Videoclip இணைப் பாருங்கள்). இது பற்றிய மேலதிக தகவல்கள் கிடைத்தவுடன் பகிர்கிறேன்.
அன்புடன்
மதுரகன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
3 Response to "ஆறாவது புலன் சாத்தியமாக்குகிறார் பிரணவ் மிஸ்ட்ரி"
Nice Mathurahan. I always prefer your articles.
இப்போதுதான் முதன்முதலாக உங்கள் வலைப்பதிவை படிக்கிறேன். புதிய தொழில்நுட்பத்தை (ஆகுமேண்டேட் ரியாலிட்டி) பற்றி எளிதாக புரியும்படி வீடியோ உள்ளது.தொடர்ந்து எழுதுங்கள்.வாழ்த்துக்கள்.
உங்களை கிரிக்கெட் ஆட அழைத்துள்ளேன். வந்து ஆடித்தான் பாருங்களேன்.
http://sshathiesh.blogspot.com/2010/03/blog-post_13.html
கருத்துரையிடுக