திங்கள், 29 மார்ச், 2010
பழக்கதோஷம்
Posted on AM 11:58 by செல்வராஜா மதுரகன்
சின்ன வயதிலிருந்து எனக்கும் சில பழக்கங்கள் விட்டுப்போகவில்லை
கண்களை மூடிக்கொணடு தென்றலை நுகர்வது
மழைதுமிக்கும் போது வானத்தைப்பார்ப்பது
சூரியனைப்பார்த்து கண்சிமிட்டுவது...
இப்படி
சின்ன வயதிலிருந்து எனக்கும் சில பழக்கங்கள் விட்டுப்போகவில்லை
கடவுளை வணங்கும்போது கைகளை முத்தமிடுவது
சாலையில் செல்லும்போது சத்தமின்றிப்பாடுவது
காலையில் எழுந்தவுடன் கண்ணாடிபார்ப்பது..
இப்படி
சின்ன வயதிலிருந்து எனக்கும் சில பழக்கங்கள் விட்டுப்போகவில்லை
அதிகாலைப்பனித்துளிகளை இலைகளில் தேடி
நாவினால் ஏந்துவது
காலைச்சூரியன் வெயிலில் சூடுபட
கால்களை நீட்டி குளிர்காய்வது
இப்படி சொல்லிக்கொண்டேயிருக்கலாம்
சின்ன வயதிலிருந்து எனக்கும் எத்தனையோ பழக்கங்கள் விட்டுப்போகவில்லை...
அன்புடன்
மதுரகன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
No Response to "பழக்கதோஷம்"
கருத்துரையிடுக