ஞாயிறு, 2 மே, 2010

அம்மா அம்மா விஜய் கதை சொல்லு - சுறா

Posted on PM 10:34 by செல்வராஜா மதுரகன்

சொல்லப் பெருசா ஒண்டும் இல்லாததில சுருக்கமா சொல்லுறேன்...




யாழ் நகர் என்று ஒரு மீன்பிடி கிராமம், அங்க சுறா என்று ஒரு ஆள். யாழ் நகர்ல இருக்கிற 1400 குடும்பத்துக்கும் பிள்ளை மாதிரி, ஊருக்கும் ஒரு தலைவர் மாதிரி. அவருக்கு ஒரு கனவு, இலட்சியம் குப்பத்தில இருக்கிற வீடெல்லாம் வீசு எண்டு சொல்லகூடிய நிலையில இல்லாம ஓட்டை உடைசலா இருகிறதால எல்லாருக்கும் நல்ல வீடு கட்டிக்குடுத்திட்டுதான் கலியாணம் செய்வேன் என்று. அதை எப்பிடி செய்யபோறோம் என்று யோசிசுக்கொண்டும் மீனைப் பிடிச்சுக்கொண்டும் வலையைப்பின்னிகொண்டும்  சின்னச்சின்ன கட்டப்பஞ்சாயத்து செய்து கொண்டும் இருக்கிறார் சுறா. 
இதற்கிடையில கிராமம் இருக்கிற இடத்தில VGP மாதிரி(இங்க உள்ள leisure world மாதிரி) ஒரு இடம் கட்டினா நல்ல வியாபாரம் நடக்குமென்டுற ஆசைல ஒரு மினிஸ்டர் என்னண்டு இவங்களை எல்லாம் எழுபலம் என்று யோசிக்கிறார். அதுக்கு தடையா வரலாம் என்று கருதப் படுற சுரவ மண்டைல தட்டிட்டு வீடெல்லாம் கொளுத்தி விடுறாங்கள். பிறகு ஒண்டுமே தெரியாத மாதிரி மினிஸ்டர் வந்து வேற இடத்தில நிலம் தாறன் விடு கட்ட காசு தாறன் அங்க போங்கோ என்றார். எல்லாரும் போக வெளிக்கிட அம்மன் சிலைக்கு கீழ விழுந்து கிடந்த சுறா எழும்பி வந்து வேண்டாம் இங்கே இருப்பம் என்றார். சரி என்று எல்லாரும் காசை திரும்ப குடுக்க. பிறகுதான் சுராக்கு தெரிஞ்சுது இதெல்லாம் மினிஸ்டர் வேளை என்று. மினிஸ்டர்ட்ட சவால் விட்டுட்டு அவர்ட கடத்தல் சாமானை கடத்தி வித்து காசு எடுத்து அவர் போட்ட தடை எல்லாம் நைசாக சமாளிச்சு 1400௦௦ குடும்பத்துக்கும் வீடு கட்டி குடுத்து சந்தோசமாக வாழ்ந்தார் சுறா. ஒரு விஷயம் மறந்திட்டேன் இடைல 2 - 3 பாட்டுக்கு ஆடின தமன்ன அக்காவையே கடைசியில கலியாணம் செய்தார்.     


இதில விமர்சிக்க வேறு ஒன்றும் இல்லை கதை பிடிச்சிருந்தா பாருங்கள். 


No Response to "அம்மா அம்மா விஜய் கதை சொல்லு - சுறா"

 

வலைப்பதிவு காப்பகம்

லேபிள்கள்

நான் பார்த்ததிலே...