திங்கள், 14 ஜூன், 2010
நினைத்தாலே இனிக்கும் 1
Posted on PM 1:44 by செல்வராஜா மதுரகன்
சிக்கித் தவிக்கின்ற மனங்களுக்குள் இன்னமும் சிறைப்பிடிக்கப் பட்டிருக்கின்ற காதல்களுக்கும், வேறுபட்டுப் பிரிந்த பின்பும் வெள்ளி முளைக்கின்ற வயதுகளிலும் மனதை வெட்கப்படுத்தும் காதல்களுக்கும் சமர்ப்பணம் என் கவிதைகள்.....
..............................................................................................................................................................
உன்னை நினைக்கும் போதெல்லாம் எங்கோ
பூக்கள் பூக்கும் காட்சிகள் மனதில்
எங்கெங்கோ பூக்கள் பூப்பதைப் பார்க்கும் போதும்
நடுவே உன் புன்னகைகள்
எதோ உன்னைப் பற்றிய நினைவிகள் இருந்தும்
இல்லாமலும் உன்னைப் பற்றியோ அன்றில்
உன்னையோ எப்போதும் உணர்ந்துகொண்டு
சுவாசித்துக்கொண்டு எதோ ஒரு நிலையில் நானும்
கவனமின்றிப் பாதையில் நடக்கும் பொது காலைக்
கல்லில் இடித்துக் காயப்படுத்திக் கொள்வது போல
சிரத்தையின்றி சிந்தனையைக் களைய விடுகின்ற போது
மனது உன்னில் மோதிக் காயப்படுகிறேன் கண்ணீர்த்துளிகளாய்....
மதுரகன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
No Response to "நினைத்தாலே இனிக்கும் 1"
கருத்துரையிடுக