வெள்ளி, 18 ஜூன், 2010

ராவணன் ஒரு நவயுக ராமாயணம் - விமர்சனம்

Posted on PM 12:14 by செல்வராஜா மதுரகன்





ராவணன் படத்தை முதல் நாளான நேற்றே நண்பர்களுடன் பார்த்து விட்டேன். பார்த்ததிலிருந்து என்ன எழுதுவது என்று தெரிய வில்லை. ஆனால் எதாவது எழுதியே ஆகவேண்டும் என்ற  தவிப்புக்காக எழுதுகிறேன். 
பாடல்களில் கவிதையாக இருந்த ராமாயணத்தை பாத்திரங்களாக்கி உலவ விட்டுள்ளார் மணிரத்னம் என்றே கூறத்தோன்றுகிறது. இது நீங்கள் கம்பனில் பார்த்த இராமாயண சரித்திரமாக இருக்காது. மாறாக பாரதிதாசனும் பெரியாரும் கனவுகண்ட தமிழ் ராவணனின் கதையாகத்தான் இருக்கும். வான்மீகி என்ற முனிவர் ராமன் என்ற அரசனின் கதையை படைத்துவிட்டுச் சென்றார். அதாவது மனிதர்களைக்கொண்டு கதையை படைத்தார், மனிதர்கலேன்றால் பாவம் புண்ணியம் களங்கம் ஆகியவற்றுக்கு ஆளாகக்கூடியவர்கள், அதேபோலவே அவர் படைத்த ராமனும் இருந்தான். ஆனால் வைணவ குலத்தில் பிறந்து திருமாலை கடவுளாக வழிபாடும் கம்பரோ மனம் கேட்காமல் ராமனை அவதார புருசராக அதாவது கடவுளாக படிக்க முயன்று பல இடங்களில் மாற்றங்களைச் செய்தார் அவற்றிலே அவர் ராமனை உயர்த்தியதோடு ராவணனையும் தாழ்த்திவிடுகிறார். 


அதைப் பொறுக்க முடியாமல் இதுவரை குரல் கொடுப்போர் பலர். ஆனாலும் அந்த வரிசையில் மணிரத்னத்தை சேர்ப்பதா இல்லையா என்று புரியவில்லை ஏனென்றால் அவர் எதிர்மறை நாயகர்களையும் சிறப்பாக காட்டுவதை வழக்கமாக கொண்டவர். உதாரணம் தளபதியிலே மம்முட்டி கதாபாத்திரம் அவர் குறிப்பது மகாபாரதத்துது துரியோதனன் என்று அனைவருக்கும் தெரியுமே.  


சரி இந்த ராமாயணத்தைப் பற்றி என்ன சொல்ல பாடல்களைப் பற்றி சொல்லவே வேண்டாம் ஏற்கனவே உசிரே போகுதே மெகா ஹிட், ஏனைய பாடல்களும்தான். கேட்கும் போது எனக்கு அவ்வளவு பிடிக்காத பாடல் கடாக்கறி கொதிக்குது ஆனால் படத்தில் அதுவும் நன்றாக இருக்கிறது கொடு போட்டால் பாடல் பட்டையை கிளப்புகிறது. ஆனால் வழக்காமான மணிரத்னம் படங்கள் போல பாடல்கள் சில துண்டுபோடப்பட்டும் சில அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கின்றன அதுவும் அழகுதான்.   
இயக்கம் மணிரத்னம் இதெல்லாம் சொல்லி விளக்குற விடயம் இல்லை. 
ஒளிப்பதிவு அற்புதம் காடு, மலைச்சாரல்கள் படம் முழுக்க வந்து தூறும் மலை அனைத்தும் அற்புதமாக மிளிருகிறது... இரண்டு ஒளிப்பதிவாளர்கள் இருந்தாலும் பிரதான பொறுப்பு சந்தொஷ்சிவன்தான் என்று கூறினார்கள் உணமையிலேயே அவரது கைவண்ணம் படம் முழுக்க தொடர்கிறது... 
பின்னனி இசையும் இசைக்கலவையும் படத்துடனே எம்மை நகர்த்திச்செல்ல உதவுகின்றன 
நடிகர்கள் என்று பார்த்தால் - விக்ரம் இல்லாமல் என்னால் படத்தை நினைத்துப்பார்க்க முடியவில்லை, எதற்கும் ஹிந்தி படத்தையும் பார்க்கவே உள்ளேன் அங்கும் விக்ரம் மற்ற வேடத்தில் எப்படி நடித்துள்ளார் என்பதைப் பார்க்கவே. 
முதல் முதலில் காதல் வயப்படுவதாகட்டும், அதை நாசூக்காக கூறுவதாகட்டும், வெறி கொண்டு கத்துவதில் என்று விக்ரம் மேலே நிற்கிறார். அடுத்து ப்ரித்விராஜ் தனது பணியை மிகவும் சிறப்பாக செய்து முடித்து உள்ளார் அழகாகவும் இருக்கிறார். ஆனால் ஒரு சில இடங்களில் அவரது நடவடிக்கையை ஏற்க மனம் மறுக்கிறது. ஆனால் ராமனை விட ராவணனை நல்லவனாக காட்ட மணிரத்னம் பயன்படுத்திய இடங்களாகவே அவற்றை நான் பார்க்கிறேன். ஐவ்றையா கணவனைப் பிரிந்து தவிக்கும் இடங்களில், உண்மை தெரிந்து குமுறும் இடங்களில், கணவன் சந்தேகப்பட்டதும் கதறும் இடங்களில் சற்றே சலனப்படும் இடங்களில் சிறந்த நடிகையாக கண்ணில் வருகிறார். 
பிறப்பு மற்றும் விக்ரம் தம்பியாக வந்த முன்னா இருவரும் இவர்களிலே முன்னா ஒருபடி மேலேயே சென்று திறமையை காட்டி இருக்கிறார்கள். முன்னாவை இனி எதாவது படங்களில் ஹீரோவாக பார்க்க வாய்ப்பு கிடைக்கலாம்.  
நிச்சயாமாக குறிப்பிட்டுக் கூறப்படவேண்டிய ஒருவர் ப்ரியாமணி கொஞ்ச நேரமே வந்தாலும் கண்ணுக்குள் நிற்கிறார். பாவப்பட்ட ரஞ்சிதாவும் வாயைத்திறக்காமலே சில காட்சிகளில் வந்து போகிறார்(டப்பிங் பேச ஆள் கிடைத்தால் தானே). 
இதை விட படத்துக்கு வசனம் சுகாசினி - அனல் தெறிக்கும் வசனங்களை அழுத்தி இருக்கிறார் அவருக்கும் ஒரு பாராட்டு.
இதுவரைக்கும் இப்படி சமாளிக்கிறேன் என்றால் என்ன அர்த்தம் கதையை முழுமையாக கூற விரும்பவில்லை என்பதுதான். நிச்சயமாக தியேட்டர் இல் சென்று பார்க்க வேண்டிய படம். திரைக்கதை சில இடன்காளில் குழப்பமாக இருந்தாலும் படம் திறமையானவர்களின் சேர்கையில் வந்த அற்புதமான ஒரு கலவை. நிறைவாக ஆர்வக்கோளாறுகளுக்காக படத்தின் கதையில் கொஞ்சம், கேட்க விரும்பாதவர்கள் இதைத் தவிர்த்து விடுங்கள். 
படத்தில் ராவணன் இருக்கிறார் - விக்ரம்(வீரா) காட்டு வாசியினம் , புரட்சியாளர் 
ராமன் இருக்கிறார் - ப்ரித்வி (தேவ் பிரகாஷ்) போலீஸ் 
சீதை இருக்கிறார் - ஐஸ்வர்யா (ராகினி) - ப்ரித்வியின் மனைவி
சூர்ப்பனகை இருக்கிறார் - ப்ரியாமணி (வெண்ணிலா) - விக்ரம் தங்கை 
அனுமார் இருக்கிறார் - கார்த்திக் (ஞானப்ரகாசம்) வனஇலாகா அதிகாரி 
இனி ராமன் மனைவியை ராவணன் கடத்துவதி படம் தொடங்கி ராமன் மனைவியாய் எப்படி மீட்கிறார் என்பதில் நிறைவு பெறுகிறது வழக்கம் போலவே ராவணனும் சாகிறான் ஆனால் எப்படி என்பதை படத்தில் பாருங்கள். ஆனால் கம்ப ராமாயணத்தை போலல்லாது இங்கே மனிதர்களால் படைக்கப்பட்ட ராவணனில், ராமன் ராவனைக் கொள்ள சதிசெய்கின்றான் இருமுறை ஒருமுறை பெண்களுக்குள் மறைந்திருந்து சுடுகிறான் மறுமுறை பெண்ணைப் பயன்படுத்திச் சுடுகிறான். இங்கு சீதையின் மனதிலும் சலனம் வருகின்றது சில இடங்களில் அவள் ராவணனை நல்லவனாகப பார்க்க ஆராம்பிக்கின்றால். இங்கு ராவணன் கடைசி வரை சீதையின் மூக்கு நுனியைக் கூட தீண்டாமல் சாகின்றான். 


ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் திராவிட கொள்கைகளைக் கேட்டு வளர்ந்த தமிழர்களாலே இதை பார்க்கக் கூடியதாக இருக்கும் அதில் கூட தீவிர ராம பக்தர்கள் சந்தேகமே.. ஆனால் ராம வெறியுடன் வாழும் வடநாட்டுக்காறரால் எப்படி இந்தப் படம் நோக்கப் படப்போகின்றது என்று எனக்குப் புரியவில்லை. 


மதுரகன்  


1 Response to "ராவணன் ஒரு நவயுக ராமாயணம் - விமர்சனம்"

 

லேபிள்கள்

நான் பார்த்ததிலே...