புதன், 24 நவம்பர், 2010

கடவுள் - எனது ஐம்பதாவது பதிவு..

Posted on PM 8:29 by செல்வராஜா மதுரகன்

இது கமலின் குரலில் ஒலிக்கும் யாருக்கும் விளங்காதாம் என்ற நாத்திகம் தொனிக்கும் கவிதையை கேட்ட பின்பும் அது தொடர்பாக Facebook இல் எழுந்த விவாதங்களின் தொடர்பாகவும் முன்வைக்கப்படும் எனது சொந்தக் கருத்துக்களின் தொகுப்பு. அடக்கத்தின் அளவு கருதி இதைப் பாகங்களாக பிரித்து எழுத ஆசைப்படுகிறேன். 

பிடித்தவர்கள் படிக்கவும். விரும்பியவர்கள் வாதம் செய்யலாம்.. பிடிக்காதவர்கள் தவிர்த்து விடவும்... அத்துடன் நான் ஒரு ஆத்திகன் என்பதையும் முன்னரே கூறிக்கொள்ள விரும்புகிறேன்.. அதற்காக என்னை பகுத்தறிவுச் சிந்தைக்கு எதிரானவனாக எண்ண வேண்டாம். உண்மையான பகுத்தறிவுச் சிந்தையின் தந்தையான இங்கர்சாலின் கொள்கைகளின் தீவிர ரசிகன் நான். ஆனால் பகுத்தறிவு வாதத்திற்கும் நாத்திகத்திற்கும் இடைவெளி உண்டு என்பது எனது கருத்து...

முதலில் அந்தக் கமல் கவிதை ஒளி மற்றும் வரி வடிவங்களில்..
(எழுத்துப் பிழைகளுக்கு மன்னிக்கவும்)
"கிரகனாதி கிரகனங்கட்பாலுமே ஒரு
அசகாய சக்தி உண்டாம்
ஆளுக்கு ஆள் ஒரு பொழிப்புரை கிறுக்கியும் ஆருக்கும் விளங்காததாம்..
அதைப் பயந்து அதை உணர்ந்து துதிப்பதுவன்றி...
பிறிதேதும் வழி இல்லையாம்
நாம் செய்த வினையெல்லாம் முன்செய்தது என்றது
விதி ஒன்று செய்வித்ததாம்
அதை வெல்ல முனைவோரை சதி கூட செய்தது
அன்போடு ஊழ் சேர்க்குமாம்
குருடாக செவிடாக மலடாக முடமாக
கருசேற்கும் திருமூலமாம்
குஷ்ட துஷ்யம் புற்று சூலை மூலம்என்ற
க்ரூரங்கள் அதன் சித்தமாம்
புண்ணில் வாழும் புழு புண்ணியம் செய்திடில்
புது சென்மம் தந்தருளுமாம்
கோடிக்கு ஈஸ்வரர்கள் பெரிதாக வருந்தாமல்
சோதித்து கதி சேர்க்குமாம்
ஏழைக்கு வருதுயரை வேடிக்கை பார்பததன்
வாடிக்கை விளையாடலாம்
நேர்கின்ற நேர்வலாம் நேர்விக்கும் நாயகம்
போர்கூட அதனின் செயலாம்
பரணிகள் போற்றிடும் உயிர்கொல்லி மன்னர்க்கு
தரணி தந்து அது காக்குமாம்
நானூறு லட்சத்தில் ஒரு விந்தை உயிர் தேற்றி
அல்குலின் சினை சேர்க்குமாம்
அசுரரை பிளந்ததுபோல் அணுவையும் பிளந்தது
அணுகுண்டு செய்வித்ததும்
பரதேசம் வாழ்கின்ற அப்பாவி மனிதரை
பலகாரம் செய்துண்டதும்
பிள்ளையின் கறியுண்டு நம்பினார்க்கருளிடும்
பரிவான பரப்ரம்மமே

உற்றாரும் உறவினரும் கற்று கற்பித்தவரும்
உளமாறு தொழுசக்தியை
மற்றவர் வையுபயம் கொண்டு நீ போற்றிடு
அற்றதை உண்டென்றுகொள்
ஆகமக்குளம் மூழ்கி மும்மலம் கழி அறிவை
ஆத்திக சலவையும் செய்
கொட்டடித்து போற்று மணியடித்து போற்று
கற்பூர ஆரத்தியை
தையடா ஊசியில் தையென தந்தபின்
தக்கதை தையாதிரு
உய்திடும் மெய்வழி உதாசீனத்தபின்
நைவதே நன்றெனின் நை"



எனது கருத்துக்கள் பல ஒழுங்குகள் முன்பின் மாறி அமையலாம் ஆனால் நான் சொல்ல வந்த விடயத்தை கூடியவரை எளிமையாக சொல்ல முயன்று இருக்கிறேன்...

அளவையியலில் மூன்று அளவைப் பிரமாணங்கள் உண்டு காட்சிப்பிரமாணம்கருதல்பிரமாணம், ஆகமப் பிரமாணம் இதில் மூன்றாவது நவீன அளவையியலில் கடைப்பிடிக்கப் படுவதில்லை..

காட்சிப் பிரமாணம் - கண்ணால் காண்பதை உண்டு என நிறுவுவது... மரத்தைக் காண்கிறோம் மரம் உண்டு..

கருதல் பிரமாணம் - ஒன்றின் இருப்பு இன்னொன்றை இருப்பதாக நிறுவுவது.. புகை வருவதால் தீ உள்ளது..

ஆகமப் பிரமாணம் - கற்றறிந்த பெரியவர்கள் கூறுவதை உண்மை என ஏற்றுக்கொள்வது.. இந்த இடத்தில்தான் விஞ்ஞானம் முரண்படுகிறது.. அது வெறும் வாய்ப்பேச்சை எப்படி நம்புவது என்று கேட்கிறது. ஆனால் எண்ணிப் பார்த்தால் நாங்கள் பெரும்பாலான இடங்களில் அப்படித்தான் நடந்துகொள்கிறோம்.
உதாரணம் - மருத்துவரிடம் செல்கிறீர்கள் அவர் கூறும் மருந்தை உண்கிறீர்கள் அது பற்றி நீங்கள் ஆராய்ச்சி செய்வதுண்டா..
விவசாயம் செய்பவர்கள் - வயதில் மூத்தவர்கள் சொல்வதைக் கேட்டு அறுவடைத் தேதி முடிவு செய்வார்கள்.. ஏனென்றால் மழை வருவதற்கான அறிகுறிகளை அவர்கள் அனுபவம் உணர்த்தும்.. ஒழுக்கத்தால் கல்வியால் உணர்ந்தவர்கள் அறிவுரைகளைத் தலைமேல் கொள்கிறோம்.. விவேகானந்தர் முதல் அப்துல் கலாம் வரை... அதுதான் ஆகமப் பிரமாணம்...

அதே வேலை காட்சிப் பிரமாணம் பிழைக்கும் இடங்களுமுண்டு.. வானம் கண்ணுக்கு தெரிவதால் வானம் உள்ளதா..
கருதல் அளவைப்படி தென்னை மரத்தடியில் பால் குடிப்பவரை கள் குடிப்பவராக காண நேரலாம். சமயங்கள் பெரும்பாலும் ஆகமப் பிரமாணங்களை முன்னிறுத்துவதால் பகுத்தறிவாளர்கள் என தம்மை கூறிக்கொள்பவர்களிடம் முரண்படுகிறது..

ஆனால் அவர்களையும் கடந்த விஞ்ஞானிகளின் கருத்துப் படி கடவுள் இருப்பதை எப்படி அறுதியிட முடிவதில்லையோ அது போல் அவர் இல்லாதிருப்பதையும் அறுதியிட முடியவில்லை.. ஐன்ஸ்டீன் இடம் கேட்ட கேள்வி - கடவுள் உண்டா? அவர் பதில் "It is complicated..."

அடுத்த விடயம் எனது கருத்து கடவுள் என்பது ஒரு கருப்பொருள் "God is a Concept" அது தேவை கருதி உருவாக்கப் பட்டது. கடவுளுக்கு மனிதன் தேவை இல்லை ஆனால் மனிதனுக்கு கடவுள் தேவைப்படுகின்றது..

கடவுளை விபரிக்க சிறந்த பதம் அவன் அல்ல அவள் அல்ல அவர் அல்ல.. அது என்பதே மிகச்சிறந்த பதம் ஏனென்றால் உயர்திணை அல்திணை என்றோ ஆண் பெண் என்றோ பாகுபடுத்தப் படமுடியாத கருப்பொருள் அது..

மதங்கள் தோன்றும் போது அவை தோன்றிய இடம், காலம் மக்கள் வாழ்க்கை முறைக்கேற்ப கடவுளை வகுத்துக்கொண்டது.. ஒரு பூனை தனக்கு ஒரு கடவுளை சிருடித்து இருந்தால் அந்தக் கடவுளின் உருவம் ஒரு சக்தி படைத்த பூனையின் உருவாகவே கற்பனை செய்து இருக்கும்.. அது போல மனிதனுக்கும் தன்னை விட சக்தி வாய்ந்த மானிட உருவாகவே கடவுள் தோன்றினார்.. அந்தக் காலகட்டங்களில் அரசர்கள் சக்தி ஆதிக்கம் மிகுந்தவர்களாக இருந்ததால் வர்கள் உடைகளுடன் தம்மைப் பயப்படுத்தும் ஆயுதங்களுடன். மற்றும் தம்மை வாழவைக்கும் மற்றும் அச்சுறுத்தும் மிருகங்களுடனும் கடவுள் படைக்கப் பட்டார்.(ஆரம்பகாலத்தில் தோன்றிய எல்லா மதங்களிலும் கடவுள் இப்படித்தான் சிருடிக்கப் பட்டார்.) அவரவர் நாகரிகங்கள் வாழ்க்கை முறைக்கேற்ப கடவுளின் ஆடைகள் அணிகள மாறுபட்டன. மலை வாசிகளின் கடவுள் அவர்கள் ஆடை தரித்தார்.. இன்னும் பல..

குளிர் நாடுகளில் தோன்றிய மதங்கள் மாமிசம் புசிப்பதை ஊக்குவிக்க வெம்மை மிகுந்த நாடுகளில் தோன்றிய மதங்கள் மாமிசம் உண்பதை கூடியவரை தவிர்க்க வற்புறுத்தின..

இது ஒரு பொதுப்படையான கருத்து.. மேலதிக சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள். தெளிவான மற்றும் விஞ்ஞான பூர்வமாக கடவுளின் இருப்பை உறுதி செய்ய சுஜாதா எழுதிய கடவுள் என்ற புத்தகத்தை வாசிக்கவும்...
மேலும் தொடர்வேன்

அன்புடன்
மதுரகன்



3 Response to "கடவுள் - எனது ஐம்பதாவது பதிவு.."

.
gravatar
KANA VARO Says....

பகிர்வுக்கு நன்றி

வாழ்த்துக்கள்

.
gravatar
பெயரில்லா Says....

ne rofl se http://www.ablecan.co.uk/files/d27.php?id5e6o1l0-Photo53.JPG

 

லேபிள்கள்

நான் பார்த்ததிலே...