வியாழன், 30 டிசம்பர், 2010

கடந்துபோகிறதா ஓர் ஆண்டு..? பாகம் - 1(நானும் பதிவுலகமும்)

Posted on PM 9:20 by செல்வராஜா மதுரகன்

2010 எனும் ஓர் ஆண்டு சப்தமின்றி எம்மைக் கடந்து செல்லத் தயாராகிக்கொண்டிருக்கிறது. ஆனாலும் ஒவ்வொருவருக்கும் நினைவுகள் கொஞ்சத்தை மறக்க முடியாத சம்பவங்களாக, மாறாத வடுக்களாக, என்றும் இனிய நினைவுகளாக எமக்குள்ளேயே விலகாது. அப்படியே எனது நினைவுகளுக்குள் இந்த ஆண்டு உதிர்த்துச் செல்கின்ற விடயங்களை கொஞ்சம் புரட்ட ஆசைப்படுகின்றேன். 
நான் வலைப்பூவொன்றை முதன் முதலாய் ஆரம்பித்தது 2005ம் ஆண்டில் என்று நினைக்கின்றேன். ஒரு சில கவிதைகளுடன் நின்று போனது அது. பின்பும் இப்படி ஓரிரண்டைத் தொடங்கி பாதியில் விட்டேன். பின்பு கடந்த வருடத்தில் இறுதிப் பகுதியில் தொடர்ச்சியாக ஒரு வலைப்பூவையாவது கொண்டு செல்ல வேண்டும் என்ற முடிவில் ஆரம்பித்ததுதான் இந்த மனதில் தெறித்த சாரல்கள்.
முதன் முதல் பயன்படுத்திய முகப்பு

என்னுடன் பேசும் பலர் எனது வலைப்பூவின் பெயரை மெச்சுவார்கள். அது எனக்கு சந்தோசமாக இருந்தது. ஏனென்றால் இயல்பாக எனது மனதில் உதித்த பெயர் அது. அதை விட ஆரம்பத்தில் என்ன எழுதுவது என்ற குழப்பம் இருந்தது. எனக்கு பிடித்ததை எழுதுவதா.. அல்லது அதுகளவு வாசகர்களை ஈர்க்கக்கூடிய விடயங்களை எழுதுவதா.. நான் மிகவும் ரசித்து எழுதும் ஒரு கவிதைக்கு கிடைக்கும் வாசகர்கள் அளவு மிகக் குறைவாக இருக்கும் வேளையில்.. சினிமா விடயங்கள் அற்பமாக இருந்தாலும் அதிக வாசகர்களை கொண்டுவருகின்றது. எப்படியோ தத்தி தத்தி ஓரளவு பதிவுகளை ஒப்பேற்றி விட்டேன். என்னுடைய ஒவ்வொரு பதிவையும் வாசிக்க ஒரு நூறு பேராவது நிரந்தர வாசகர்களாக உள்ளனர் அது மிகவும் மகிழ்ச்சி...
இரண்டாவது விடயம் தொழிநுட்பப் பிரச்சினைகள். ஏற்கனவே வலைப்பூ இருந்தும் அதிகளவு மாற்றங்களை செய்யாததால் தேவை இருக்கவில்லை, ஆனால் இந்தமுறை நான் வலைப்பூவினை அழகுபடுத்தும் முயற்சியில் இறங்கியபோது அடிக்கடி பிரச்சினைகள் சந்தேகங்கள் வரும் அப்போதெல்லாம் சக பதிவரும் நண்பருமான சதீஷ்(சதீஷ் இன் பார்வை) மற்றும் ராஜீவ்காந்த்(எனக்குள் ஒருவன்) ஆகியோரின்து உதவி அளப்பரியதாக இருந்தது. பதிவுலகில் நண்பர்கள் அவசியமென அப்போதுதான் உணர்ந்தேன்.. கொஞ்சம் கொஞ்சமாக கொஞ்ச நண்பர்கள் கிடைத்தனர். ஹரன்ஸ் - சுதாகரன் அண்ணா, அகசியம் - வரோ, முகிலனின் பிதற்றல்கள், பதியவும் பகிரவும் - ஸ்ரீதர்சன் ஆகியோர் குறிப்பிடப்பட வேண்டியவர்கள். இதைவிட யாரும் தவற விடப்பட்டிருந்தால் மன்னிக்கவும். அதை விட என்னுடைய ஒவ்வொரு பதிவினையும் வாசித்து கருத்துக்கூறும் நண்பர்களை மறக்க முடியாது. அதிலும் குறிப்பாக முகப்புத்தக நண்பர்கள்(Facebook) தான் நான் இவ்வளவு தூரம் பயணிக்க முக்கிய காரணம். எனவே அவர்களுக்கு இந்த இடத்தில் மனப்பூர்வமாக நன்றி கூறுகிறேன்..
நான் ஏறத்தாழ 52 பதிவுகள் எழுதியுள்ளேன் அவற்றுள் 50பிரசுரிக்கப் பட்டுள்ளன.(இரண்டு பாதியில் உள்ளது) எனது பழக்கம் எதைப்பற்றியாவது நினைவுக்கு வரும்போதே எழுதிவிட வேண்டும். பின்பு எழுதலாம் என்றோ பாதியில் இடைநிறுத்தினாலோ அது பின்பு அதோ கதிதான். இப்படி எழுதப்படாமல் போன பதிவுகள் ஏராளம். நான் எழுதியவற்றுள் சிலவற்றை மீட்டிப் பார்க்க விரும்புகிறேன். எழுதியவற்றுள் எனக்கு மிகவும் பிடித்த பதிவு உயிர்த்திருப்பு என்னும் சிறுகதைதான்.. அதற்குரிய இணைப்பு..
கூகிள் தரவுகளின் உதவியுடன் எனது வலைப்பதிவு பற்றிய சிறிய மீள் பார்வை.. 
அதிகளவு பேர் பார்வையிட்ட முதல் ஐந்து பதிவுகள்.
இங்கேயும் வசூலில் முன்னே நிற்பது எந்திரன்தான்... 

என்னுடைய வலைப்பதிவிற்கு அதிக பார்வையாளர்களை அனுப்பிவைத்த முதல் மூன்று நாடுகள்..
இந்தியா
இலங்கை
ஐக்கிய அமெரிக்க குடியரசு

இன்னும் எவ்வளவோ எழுதலாம்... ஆனால் வாசிப்பவர்களுக்கு அலுப்படிக்க விரும்பவில்லை.. அடுத்த அடுத்த பதிவுகள் இந்த ஆண்டில் என்னுடைய வாழ்வில் ஏற்பட்ட மறக்க முடியாத சம்பவங்கள் சுவையான நிகழ்வுகள் பற்றி எழுதப் போகின்றேன் கட்டாயம் அனைவரும் வாசிக்க வேண்டும்..


அன்புடன்
மதுரகன்..


No Response to "கடந்துபோகிறதா ஓர் ஆண்டு..? பாகம் - 1(நானும் பதிவுலகமும்)"

 

லேபிள்கள்

நான் பார்த்ததிலே...