வியாழன், 26 மே, 2011
கவனிக்கப்படாமல் விடப்பட்டது ஏனோ???
Posted on PM 9:30 by செல்வராஜா மதுரகன்
சந்தமிதுரி என்ற சிங்களப்பாடலைப் பலர் கேட்டு இருக்கக்கூடும்... அர்த்தம் புரியாவிட்டாலும் அந்த இசையின் இனிமையிலும் குரலின் உணர்விலும் நான் மனதைப் பறிகொடுத்துவிட்டு இருந்தேன். அந்தப்பாடலின் இசை ராஜ் என குறிப்பிடப்பட்டு இருந்தபோது அது ஒரு தமிழர் என நான் அறிந்து இருக்கவில்லை... கொஞ்சம் அந்தப்பாடலை கேட்டுவிட்டு வாருங்கள் மீதம் சொல்கிறேன்...
பிறகு சில நாட்களின் பின்னர்தான் நண்பன் அகிலனின் மூலம் இந்தப்பாடலிற்கு தமிழ் மொழிப்பதிப்பு ஒன்று இருப்பதை அறிந்தேன். அதுவும் எஸ்.பி.பி பாடியிருக்கிறார் என அறிந்ததும் அந்தப்பாடலை Youtube இல் தேடிக்கண்டெடுத்தேன்... இன்று தற்செயலாக அந்தப்பாடல் இன்று மீண்டும் என் கண்ணில் பட.. காதில் ஒட்டிக்கொண்டு விடமாட்டேன் என்கிறது. அதையும் உங்களுக்காக இங்கே இணைத்து இருக்கிறேன்..
பாடல் வரிகள் -
"மொழியின்றி விரிகின்ற என் கீதம்
வழிகின்ற இளங்காதல் சங்கீதம்இமையோரம் இதழாலே இசை சொல்வேன் இளமானே இனிக்கின்ற துயர் நீக்க வா
எந்தன் ஆசை சொல்லும் ஓசை காதல் பாஷை
உந்தன் ஆசை சொல்லும் ஓசை என்ன பாஷை
நிலவொன்று பொழிகின்ற நிறம் கண்டு நீலம் மீது நிஜமாக நீ வந்து ஏன் தோன்றினாய்
கண் வீணை காதல் இசை மீட்ட
பண் தேனைப் பதமாக்கி நான் ஊற்ற
துளிர் விட்ட ராகங்கள் சுகம் கொட்டும் நேரங்கள் சுவை ஊற்றும் வாழ்வுக்கு வரமாகுமோ
கண்ணே கீதா கீதம் தா தா
வாழ்வென்ற மலர்மீது வழிகின்ற அழகாகி வலம் வந்து என் வாழ்வில் கரம்பற்றுவாய்
உயிர் சேரும் ஒரு இருள்நேரம்
பயிராகி மெய்யொன்று உயிர் பூக்கும்
கவிபேசி நான் ஒட்ட காதோரம் தேன் சொட்ட கனவொன்று உன்னாலே நனவாகுமோ
உள்ளம் தந்தேன் உள்ளே வா வா"
அதன் பிறகு அந்தப்பாடலைப் பற்றி மேலும் சில விடயங்கள் தேடியபோது ஒரு ஆச்சரியம் தரும் விடயம் தெரியவந்தது. கனேடிய தமிழர்களால் எடுக்கப்பட்ட "1999" எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்தான் அது என்பதுவும் அந்த திரைப்படத்தைப்பற்றி மேலதிக விடயங்கள் சிலவும் தெரியவந்தது.
கீழே அந்தத் திரைப்படம் பற்றிய இணைப்புக்களும் அதன் Trailerஉம் உங்கள் பார்வைக்கு...
வேறு இணைப்புக்கள் -
1. விக்கிபீடியா
திரைப்படத்தை பெற்றுக்கொள்ள முயல்கிறேன்... கிடைத்தால் பார்த்து விமர்சனம் எழுதுகிறேன்...
அன்புடன்
மதுரகன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
No Response to "கவனிக்கப்படாமல் விடப்பட்டது ஏனோ???"
கருத்துரையிடுக