சனி, 28 மே, 2011

மனதைவருடும் மலேசிய இசை - திலீப் வர்மன்

Posted on AM 1:35 by செல்வராஜா மதுரகன்


தமிழ் மெல்லிசையை முழுமையாக சினிமா ஆக்கிரமித்துக்கொள்ள முயலும் இந்த யுகத்தில் இசைத்தொகுப்புக்கள் சில அவ்வப்போது வெளிவந்து சுதந்திரமான தமிழ் மெல்லிசை உலகத்தின் இருப்பைக்காத்துக்கொள்ளும். ஆனால் அதிலும் வெளிவருகின்ற இசைத்தொகுப்புக்கள் பூரணமாக Rap மற்றும் Hip Hop இசைக்கே முக்கியத்துவம் வழங்க முற்படுகின்றன. இவற்றின் இசை இன்றைய இளைய தலைமுறையினரின் மனதை ஆக்கிரமித்துவிட்டது எவ்வளவிற்கு உண்மையே அதே அளவிற்கு உண்மையான விடயம் தமிழ் உச்சரிப்பினை இவை சிதைத்துக்கொண்டு இருப்பது. வர வர அதன் அளவு மோசமாவதையும் புதிதாக வருபவர்கள் நன்றாக தமிழ் உச்சரிக்கத் தெரிந்து இருந்தும் அது நாகரிகம் இல்லை என நினைத்து தமிழை தவறாக கையாள ஆரம்பிப்பதும் வேதனை அளிக்கும் விடயங்கள். உதாரணமாக தமிழ் இவர்களால் தமில் ஆகியுள்ளது, பெண்ணே என்பதை பென்னே என்கிறார்கள். இப்படி இவர்களில் சிலரால் தமிழ் பட்டபாடு கொஞ்சம் நெஞ்சம் இல்லை. இந்தக் காலகட்டத்தில் இனிமையான மெல்லிசைக்கும் தூய்மையான தமிழ் உச்சரிப்பிற்கும் இன்னும் காலமிருப்பதை கண்ணுக்கு முன்னே காட்டிக்கொண்டிருப்பவர்தான் இன்றைய எனது பதிவினை ஆட்கொள்ளும் திலீப் வர்மன்.
ஒரு நண்பரின் Facebook இணைப்பு ஒன்றினை சொடுக்கியபோது நான் உணர்ந்து இருக்கவில்லை. அன்றைய நாள் முழுவதையும் இல்லை.. கிட்டதட்ட அந்த வாரம் முழுவதையும் ஆக்கிரமிக்கப்போகும் இரு பாடலாக அது அமையப்போகிறது என. திலீப் வர்மனின் குரலில் வெளியான "உயிரைத்தொலைத்தேன்" என்ற மிகப்பிரபல்யம் வாய்ந்த பாடல்தான் அது. அதற்குப்பிறகு அவரது ஒவ்வொரு பாடலாக தேடித்தேடிப் பார்த்தேன் கேட்டேன் உணர்ந்தேன்...
அவரைப்பற்றி கொஞ்சம்
பெயர் - எஸ். திலீப்வர்மன்
வயது - தெரியாது 
பிறந்த திகதி - ஏப்ரல் 28
பிறந்த இடம் - பினாங்கு மாநிலம், மலேசியா
தொழில் - பாடகர், இசையமைப்பாளர்,பாடலாசிரியர்

இளையராஜா மற்றும் ஏ. ஆர். ரகுமான் ஆகியோருடைய தீவிர ரசிகராக தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் அவர் 2000 ஆம் ஆண்டில் ஒரு மேடைப்பாடகராக தனது இசைப்பயணத்தை ஆரம்பித்தார். 2002இல் நவீனம் என்ற இசைத்தொகுப்பில் பாட அவருக்கு கிடைத்தவாய்ப்பு அவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. பின்னர் தாமாக ஆரம்பித்த நிறுவனத்தின் மூலம் இசைத்தொகுப்புக்களை அவர் வெளியிட ஆரம்பித்தார் அந்தவேளை ஜெய் இனது இசையில் வெளியான "உயிரைத்தொலைத்தேன்" பாடல் மலேசியா கடந்து சர்வதேச அளவில் அவருக்கு புகழ் தேடிக்கொடுத்தது. தென்னிந்திய இசை ரசிகர்களால் கவனிக்கப்படும் ஒருவராக மாறினார். தொடர்ந்து அவரது ஒவ்வொரு தொகுப்புக்களும் வெற்றி பெற்று எண்ணற்ற விசிறிகளை உருவாக்கிவிட்டது. 2007ம் வருடம் மலேசிய இந்திய இசை உலகத்தின் சிறந்த ஆண் பாடகருக்கு உரிய விருது அவருக்கு கிடைத்தது. அவரது பாடல்களின் எனக்கு மிகவும் பிடித்த உயிரைத்தொலைத்தேன் பாடலின் இணைப்பை இங்கு தருகிறேன்.

மேலதிக இணைப்புக்கள்
2. திலீப் வர்மனின் Homepage 


மீண்டும் ஏதாவது எழுதத்தோன்றினால் வருகிறேன்..
அன்புடன், 
மதுரகன்  


No Response to "மனதைவருடும் மலேசிய இசை - திலீப் வர்மன்"

 

லேபிள்கள்

நான் பார்த்ததிலே...