திங்கள், 25 ஜனவரி, 2010

யாருக்கு வோட்டு?? யாருக்கு வேட்டு?? - பாகம் 2

Posted on PM 3:56 by செல்வராஜா மதுரகன்

வவுனியா புறப்பட்டு வந்ததிலும் இங்கு சில தனிப்பட்ட வேலைகளிலும் பதிப்பின் இரண்டாம் பாகத்தை சற்று தாமதமாக தொடர்கிறேன். 

தாமதமும் நன்மைக்கே என்றது போல எழுத புதிதாக சில விடயங்கள் கிடைத்துள்ளது. அவற்றுள் முக்கியமானது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா எதிரணி வேட்பாளர் பொன்சேகாவை ஆதரிப்பதாக இறுதி நேரத்தில் அறிவித்துள்ளமை. இது எந்த அளவிற்கு பாதிப்பு செலுத்தப்போகிறது என்று உறுதியாக சொல்ல முடியாவிட்டாலும் பாமரமக்களிடத்தில் அவருக்கு இன்னமும் செல்வாக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால் அவருடைய ஆட்சிக்காலத்தில் நடைமுறைப்படுத்தியுள்ள சமிறத்தி முதலான திட்டங்களால் பயன் பெற்ற ஏழை மக்கள் பலர். அதை விட்ட ஊழலுக்கும் குடும்ப ஆட்சிக்குமெதிராக வாக்களிக்கும்படி அவர் கூறியுள்ளமை கற்ற சமூகத்தில் சிறிதளவு மாற்றத்தை ஏற்படுத்தலாம். 

அடுத்தது நான் முதலே கூறிய படி பிரயத்தனப்பட்டேனும் வெல்வதற்குரிய முழு முயற்சியில் தற்போதைய அதிபர் இறங்கியுள்ளமை தெரிகிறது. இதற்கு சான்றாக குருநாகலையில் பிடிக்கபட்டிருக்கும் லாரியில் எதிரணிக்கு எதிரான போஸ்டர்கள் மற்றும் சாராயப்போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் பல பல செய்திகள், நான் கூறி தெரிய வேண்டியதில்லை. 


தமிழ் மக்கள் அதிகம் வாழும் இடங்களில் ஏராளமான வாக்குச்சீட்டுக்கள் இன்னமும் விநியோகிக்கப்படாது காணப்படுகின்றமை எங்களது வாக்குப்பலத்தை முடக்கும் மறைமுக முயற்சியாக தெரிகின்றது. 
ஆனால் இன்னொரு முக்கிய விடயம், இங்கு வவுனியாவில் பெரும்பாலான மக்கள் இதுவரை வாக்களிக்கும் மன நிலையில் இல்லை. 50 வீதம் வாக்களிப்பதே பெரிய விடயம் போல இருக்கிறது. என் இந்த மன நிலை என்று புரியவில்லை. நான் அவர்களுக்கு கூறியது இதுதான் 
"இப்போது உள்ள ஜனாதிபதியே தொடர்ந்து இருக்க விரும்பினால் வாக்களிக்க தேவை இல்லை வேறு யாரவது வேண்டுமெண்டால் வாக்களியுங்கள்"    






என்னைப் பொறுத்தவரையில் தமிழர்கள் முன்னால் இருப்பது இரண்டு வழிகள்தான் தற்போதய ஆட்சியை வைத்துக்கொள்வதா அல்லது ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதா என்பதுதான். தேர்தலைப்புறக்கணிப்பதும் சிவாஜிலிங்கத்திற்கு வாக்களிப்பதும் மகிந்தவிற்கு வாக்களிப்பதற்கு சமமானவை என்பது என்கருத்து ஏனென்றால் பெரும்பான்மை வாக்குகள் பிளவுபட்டாலும் அவற்றுள் பெரும்பங்கு மகிந்தவிற்குத்தான் செல்லும் கிட்டத்தட்ட மகிந்த அவற்றுள் 60 வீதமானவற்றையும் பொன்சேகா 40 வீதம் அல்லது அதற்கு சற்றுக் குறைவாக பெறக்கூடும்


இந்தவகையில் முஸ்லிம்களின் பெரும்பங்கு வாக்குகள் பொன்சேகா பக்கமும்(70வீதம்) சிறுபங்கு மகிந்தபக்கமும் சாயலாம் என எண்ணப்படுகின்றது. அதே வேளை மலையகத்தமிழர்களின் நிலைபற்றி உறுதியாக கூற முடியாவிட்டாலும் மாகாணசபைத் தேர்தல்களைக்கொண்டு நோக்கும்போது பொன்சேகா பக்கம் 65 வீதமானோரும் மகிந்த பக்கம் 35 வீதமானோரும் வாக்களிக்கக் கூடும். இப்படி அமைகின்ற நிலையில் பொன்சேகா, மகிந்த ராஜபக்சவினை விட சற்று பின் தங்கிய நிலையில் காணப்படுவார்.




இந்நிலையில் வடக்கு, கிழக்கு மற்றும் கொழும்புத்தமிழர்களின் வாக்குகள் முக்கியத்துவம் பெறும். இவர்கள் ராஜபக்சவிற்கு வாக்களித்தாலோ அல்லது தேர்தலைப் புறக்கணித்தாலோ அல்லது சிவாஜிலிங்கத்திற்கு வாக்களித்தாலோ சந்தேகத்திற்கிடமின்றி மகிந்த மீண்டும் ஜனாதிபதியாகி தன்னுடைய ”சேவையை” மேலும் 8 வருடங்களுக்கு தொடர்வார். அப்படியின்றி எதிர்த்து வாக்களிக்கும் பட்சத்தில் சரத் பொன்சேகா ஜனாதிபதி ஆகக்கூடும்.


எனவே யாரை வைத்திருப்பது யாரை வீடுக்கு அனுப்புவது என தமிழ் பேசும் மக்கள் தீர்மானிக்க வேண்டும். ஏனென்றால் சனத்தொகையில் 26 வீதமான சிறுபான்மைத், தமிழ் பேசும் மக்கள் நினைத்தால் தேர்தலில் இதை சாதிக்கலாம் ஏனென்றால் பெரும்பான்மை வாக்குகள் பிளவுபட்டுள்ளன.


இதற்குமேல் எதிர்பார்ப்புக்களை வீசாமல் இரு நாள் பொறுத்து முடிவுகளுடன் தொடர்கிறேன். 


அன்புடன் 
மதுரகன் 




    
  


No Response to "யாருக்கு வோட்டு?? யாருக்கு வேட்டு?? - பாகம் 2"

 

வலைப்பதிவு காப்பகம்

லேபிள்கள்

நான் பார்த்ததிலே...